வெள்ளை முள்ளங்கி

காய் வகைகளில் மண்ணுக்கு அடியில் விளையும் கிழங்கு வகைகளில் ஒரு கிழங்கு வகை தான் இந்த வெள்ளை முள்ளங்கி. இந்த முள்ளங்கியை உண்பதால் ஏற்படும் நன்மைகளை இங்கு அறிந்து கொள்வோம்.

1.மலச்சிக்கலுக்கு தீர்வு

நீர் அதிகம் அருந்தாமை, உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறை போன்ற காரணங்களால் விளையும் பெரும் பிரச்சனை மற்றும் பலரும் மலச்சிக்கல் பிரச்சனையால் அவதியுறுகின்றனர். தினந்தோறும் வெள்ளை முள்ளங்கியை ஏதேனும் ஒரு உணவுப் பொருளாக செய்து சாப்பிட்டு வருபவர்களுக்கு செரிமான கோளாறுகள் நீங்கும். உடலில் நீர்ச்சத்தை அதிகரித்து மலச்சிக்கல் பிரச்சனையும் நீங்கும்.

2.இதய அடைப்பை நீக்கும்

உடலின் அனைத்து உறுப்புகளுக்கு ரத்தத்தை பாய்ச்சும் உறுப்பான இதயத்தில் சிலருக்கு அடைப்பு ஏற்பட்டு இதய பாதிப்பு, இதயம் தற்காலிகமாக செயலிழப்பது போன்ற உயிருக்கு ஆபத்தான பாதிப்புகள் ஏற்படுகின்றன. வெள்ளை முள்ளங்கியை தினந்தோறும் உணவில் சேர்த்து உண்பவர்களுக்கு இதய தசைகள் நன்கு வலுப்பெற்று, இதயம் சம்பந்தமான நோய்கள் அண்டாது.

3.வெள்ளை முள்ளங்கி மூலத்தை குணமாக்கும்

அதிக காரமான உணவுகளை உண்பது, தொடர்ந்து ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து பணிபுரிவது, நாட்பட்ட மலச்சிக்கல் போன்றவற்றால் மூலம் ஏற்படுகிறது. எப்படிப்பட்ட மூல நோயையும் தினந்தோறும் முள்ளங்கி காயை சமைத்து உண்டு வருவதால் மூல நோய்களில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.

4.வெண்குஷ்டம் பரவலைத் தடுக்கும்

சிலருக்கு தோலின் செல்களில் ஏற்படும் மாறுதல்கள் காரணமாக தோலின் சில பகுதிகள் வெள்ளை நிறமாக மாறி, வெண்குஷ்டம் ஏற்படுகிறது. இந்நோய்க்கு நிரந்தர தீர்வாக எந்த ஒரு மருந்தும் இல்லை என்றாலும் முள்ளங்கி காயை இந்த பாதிப்பு கொண்டவர்கள் சாப்பிட்டு வந்தால் வெண்குஷ்டம் உடலின் பிறபகுதிகளுக்கு பரவுவதை கட்டுப்படுத்துகிறது.

5.சுவாசக் கோளாறுகளைக் குறைக்கும்

நாம் அன்றாடம் சுவாசிக்கும் காற்றில் கண்ணனுக்கு தெரியாத நுண்கிருமிகளும், மாசுகளும் அதிகம் இருக்கின்றன. இவை எல்லாம் நாம் சுவாசிக்கும் போது நமது நுரையீரல்களுக்கு சென்று விடுகிறது. முள்ளங்கியை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வருபவர்களுக்கு நுரையீரல் தூய்மையடையும், சுவாச பிரச்சனைகளும் தீரும்.

 

6.காய்ச்சலுக்கு தீர்வு

காலநிலை மாறுதல்களால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சல் ஏற்பட்டு அவதியுறுகின்றனர். இந்நேரத்தில் உடலின் உஷ்ணம் அதிகமாகி நீர் சத்துகளின் தேவை உடலுக்கு அதிகம் ஏற்படும். இந்நேரங்களில் முள்ளங்கி காயை பக்குவம் செய்து உண்டால் ஜுரம் விரைவாக நீங்கும்.

7.உடல் எடை குறைப்பு

கட்டுப்பாடில்லாமல் எந்த வகையான உணவுகளையும் உண்பது, சரியான உடற்பயிற்சி மேற்கொள்ளாமல் இருப்பது போன்றவை உடல் பருமன் ஏற்படுவதற்கு அதிகக் காரணமாக இருக்கிறது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் காலையில் முள்ளங்கி ஜூஸ் அருந்தி வந்தால் விரைவாக உடல் எடையைக் குறைக்க முடியும்.

8.மஞ்சள் காமாலையின் தீவிரத்தைக் குறைக்கும்

நாம் சாப்பிடும் உணவை உடலுக்கு தேவையான சத்தாக மாற்றும் அரும்பணியை கல்லீரல் செய்கிறது. இந்த கல்லீரல் கிருமித்தொற்றால் பாதிப்படையும் போது மஞ்சள் காமாலை நோய் ஏற்படுகிறது. இந்த மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் முள்ளங்கி ஜூசை உப்பு சேர்க்காமல் குடித்து வந்தால் இந்நோயின் தீவிரத்தன்மை குறையும்.

9.சிறுநீரக கற்கள் கரையும்

தண்ணீர் அதிகம் அருந்தாமை, உப்பு தன்மை அதிகமாக இருக்கும் நீரை குடிப்பது போன்ற காரணங்களால் இன்று பலருக்கும் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகிறது. முள்ளங்கி சாறு தினந்தோறும் இரண்டு வேளை அருந்தி வந்தால் சிறுநீரக கற்கள் கரைந்து, சிறுநீரகங்களின் நலம் காக்கப்படும்.

தினசரி நாம் உண்ணும் உணவில் ஏதாவது ஒரு காய் வகையை கூட்டு, பொரியல், வதக்கல் என பல முறைகளில் தயாரித்து கூடுதல் பதார்த்தமாக உண்கிறோம்.இங்கு வெள்ளை முள்ளங்கியின் பயன்களையும் தெரிந்து கொண்டோம்.எனவே இதனையும் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.