அகத்திக்கீரை பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய 6 முக்கிய மருத்துவ குணங்கள்

  1.  அகத்திக் கீரையை சாறு மற்றும் சிறிதளவு தேன் கலந்து நீர்க்கோர்வை பிடித்துள்ள குழந்தைகளுக்கு உச்சித் தலையில் தடவினால் குணமாகும்.காயங்களுக்கு இலையை அரைத்துப் போட புண்கள் ஆற்றும் சக்தி உள்ளது.உணவு எளிதில் ஜீரணமாவதுடன் அகத்திக் கீரையை சாப்பிடுபவர்களுக்கு பித்த சம்பந்தமான நோய்கள் நீங்கும்.
  2. வாரத்திற்கு ஒரு முறையாவது அகத்திக்  கீரை சாப்பிட்டு வர, உடல் உஷ்ணம் குறைந்து கண்கள் குளிர்ச்சி பெரும்.பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு உதவும் சுண்ணாம்பு சத்து அகத்தி கீரையில் அதிகமாக இருக்கிறது.அகத்தி இலைகளை உலர்த்தி பொடி செய்து காலை,  மாலை இருவேளை பாலில் அரைக் கரண்டி அலவு கலந்து குடித்து வந்தால் வயிற்றுவலி குணமாகும்.
  3. தொண்டைப்புண், தொண்டை வலி ஆகியவை உள்ளவர்கள் அகத்தி கீரையை பச்சையாக மென்று சாப்பிட்டால் விரைவில் குணமாகும்.அகத்தி கீரை வயிற்றில் உள்ள புழுவை கொல்லும் மற்றும் மலச்சிக்கலை தீர்க்கும்.உயர்ந்த இரத்த அழுத்தத்தை குறைக்க வாரத்திற்கு ஒருமுறையாவது அகத்தி கீரையை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.
  4. வாரத்திற்கு ஒரு முறை அகத்திக் கீரையை சாப்பிட்டுவர உடல் உஷ்ணம் குறைந்து,கண்கள் குளிர்ச்சியாகும். நீராடைப்பு, பித்த மயக்கம் குணமாகும். சிறுநீர் தடையில்லாமல் போகும்.அகத்திக் கீரையை வெயிலில் காய வைத்து பொடியாக்கி பாலில் கலந்து குடித்தால் மார்பில் ஏற்படும் வலி முற்றிலுமாக குறையும். அகத்திக் கீரையை தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும். பார்வை தெளிவாகும்.
  5. அகத்தி இலைச்சாறை வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் அருந்த, ஒரு மாதத்தில் இருமல், இரைப்பு மாறும்.அகத்தி இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து, ஒரு ஸ்பூன் சாறோடு, இதே அளவு தேன் கலந்து அருந்த, வயிற்றுவலி தீரும்.அகத்தியின் பூக்களைப் பிழிந்து சாறு எடுத்து, நெற்றிப் பொட்டில் பூசி விட, தலைவலி குறையும்.
  6. அகத்திப்பூ சாறு ஒரு கரண்டி எடுத்து, இதோடு ஒரு கரண்டி தேன் கலந்து சாப்பிட இருமல், சளி தீரும்.அகத்திக்கீரை சாறு இரு துளி மூக்கில் விட தும்மல், ஜலதோஷம் தீரும்.மருந்துகளை சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் வெப்பத்தை குறைக்க அகத்திக்கீரையுடன் பாசிப்பருப்பு சேர்த்து சமையல் செய்து சாப்பிட்டால் குணமாகும்.