பீர்க்கங்காயின் மருத்துவ குணங்கள் மற்றும் நன்மைகள்/ Medicinal properties and benefits of ridge gourd

நாம் தினமும் உணவில் பயன்படுத்தும் காய்களே எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளன. கண் பார்வை தெளிவு, நோய் எதிர்ப்புச் சக்தி ஆகியவற்றையும் வழங்கும் பீர்க்கங்காயை அடிக்கடி உண்ண வேண்டும். பீர்க்கங்காயில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, நார்ச்சத்து, மாவுப் பொருள், வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி என அனைத்து வகையான வைட்டமின்களும் தாது உப்புக்களும் அதிக அளவில் உள்ளன. கார்போஹைட்ரேட்டுகள், கரோட்டீன், நல்ல கொழுப்பு, புரதம், ஃபைட்டின், அமினோ அமிலம், அலனைன், ஆர்ஜினைன், கனிகளில் லினோலிக் அமிலம், ஒலியிக், பால்மிட்டிக், ஸிடியரிக் அமிலம் போன்றவை காணப்படுகின்றன. முழுத்தாவரமும் மருந்து இதன் இலை, விதைகள், வேர் என பீர்க்கங்காயின் முழுத்தாவரமும் மருத்துவக் குணங்கள் நிரம்பியவையே.

  • தோல் சம்பந்தமான அனைத்து கோளாறுகளுக்கும் நல்ல தீர்வை கொடுக்கக் கூடியது பீர்க்கங்காய் ஆகும்.
  • இதன் இலைகளும் மருத்துவ குணம் உடையவை. இலைகளை கண்ணில் ஏற்படும்  வலிகள் மற்றும் வீக்கத்திற்கு அதன் சாற்றை போடுவதில் மூலம் விரைவில் குணம் அடையும்.
  • சிறுநீரக கோளாறுகளுக்கு  நன்கு  முற்றிய பீர்க்கங்காயை பயன்படுத்தப் படுகிறது.
  • பீர்க்கங்காயில்  இருக்கும்  வைட்டமின்கள் தோல் நோய்களையும் மற்றும் நீரழிவு நோய்களையும் குணப்படுத்துவதில் உதவுகின்றன.

 

  • பீர்க்கங்காயை உணவில் எடுத்து கொள்ள அதிக படியான காய்ச்சல், சளி தொல்லை, இருமலால் அவதி படுவோருக்கு நல்ல மருந்தாகப் பயன்படுகிறது.
  • ரத்த சோகையில் இருந்து விடுபட பீர்க்கங்காய் சாப்பிடலாம்.
  • பீர்க்கங்காயின் பழங்கள் நன்மை தர கூடியதே. அதை வாந்திக்கு பயன்படுத்தலாம்.  சுவாச கோளாறுகளுக்கும் அரு மருந்து.
  • மண்ணீரலில் ஏற்படும் புண்களை குணப்படுத்த பீர்க்கங்காயின் சாற்றை அதில் போடுவதன் மூலம் விரைவில் குணம் அடையும்.
  • உடலில் இருக்கும் எண்ணெய் சருமத்திற்கு இதனை பயன்படுத்த நல்லது. இதில் அடங்கி இருக்கும் கார்போஹைட்ரேட்டுகள் உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கிறது.

 

  • அனைத்து வகையான வைட்டமின்களும், தாது உப்புக்களும் அதிக அளவில் இருப்பதால், தொற்றுக் கிருமிகள் தாக்காமல் உடலைக் காத்து, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.
  • மஞ்சள் காமாலை நோய்க்கு பீர்க்கங்காய் சாறு மருந்தாகப் பயன்படுகிறது.
  • நீரிழிவு நோயாளிகள் பாகற்காய்க்கு மாற்றாக பீர்க்கங்காயைச் சேர்த்துக் கொள்ளலாம்.
  • சொறி, சிரங்கு, நாள்பட்ட புண்கள், காய்ச்சல் உள்ளவர்கள், பீர்க்கங்காய் சாம்பார் வைத்து சேர்த்துக்கொள்ளலாம். புண்கள், சொறி, சிரங்கு உள்ள இடங்களில் இலைச் சாற்றைத் தடவுதல் நல்லது.

 

  • இதன் விதைகள் பேதியை தடுக்கும், கபம் வெளியேற்றும், எண்ணெய் தோல் நோய்களுக்கு தடவும் மருந்தாகப் பயன்படும்.
  • வேரானது நீர்க் கோர்வைக்கும், மிதமான பேதி மருந்தாகவும் பயன்படுகிறது.
  • இதை கொண்டு தயாரிக்கப்படும் கஷாயம் மாதவிடாய் மற்றும் சிறுநீரகக் கோளாறுகளுக்கு பயன்படும்.